மரணம் பற்றி
கூட்டை விடுத்ததுகாண் – உயிர்க்குருவி பறந்தது காண்பூட்டை உடைத்தெறியப் – பொன்புதையல் கிடைத்தது காண் ஊட்டி வளர்த்தவுடல் – பூதம்ஒன்றிச் சமைத்தவுடல்காட்டில் எரியுதுகாண் – இந்தக்காயம் மறைந்தது காண் சிதையில் கிடத்திவைத்த – என்றன்தேகம் தனைநினைந்தேன்கதையாய்ப்பின் கற்பனையாய் – வளர்த்தகனாக்கள் தமைவியந்தேன்! காலனைப் போலநிதம் – நண்பால்கனிந்து தொடர்வதற்கேஏலுமோ இங்கெவர்க்கும் – சோரான்என்றைக்கும் காத்திருப்பான் பொய்யைக் களைந்தொழிமின் – உயர்போதந் தெளிந்துநின்மின்நைய உருக்குங்கொல்லன் – புதுநாளில் பல சமைப்பான்! – மதுரன் தமிழவேள்