ழகரப் பாட்டு

(திருஞானசம்பந்தரின் வழிமொழித் திருப்பதிகத்தில் வரும் ‘ஒழுகலரி’ சந்தத்தை ஒட்டியது)

மெழுகின்அழல் ஒழுகல்என விழிகள்அழ வழிகள்எழ இழையும் மனமே

குழலின்சடை தழலின்கரம் சுழலநடம் பழகுபவன் கழல்கள் தொழுமே

குழகன்சொலும் அழகுமொழி ஒழுகும்அரன் பொழியும்நகை நினைவில் வரவே

குழையும்நிலை விழையும்அகம் உழல்வதிலை பழையவினை ஒழியும் இனியே

– மதுரன் தமிழவேள்

ஞானசம்பந்தர் தேவாரம்:

ஒழுகலரி தழிகலியி லுழியுலகு பழிபெருகு வழியைநினையா
முழுதுடலி லெழுமயிர்க டழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகி லிழுகுமல மழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப்
பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகண் மொழிதகையவே.

பொருளுடன் படிக்க: இங்கே செல்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×