மதுரன் தமிழவேள்

மரபு மற்றும் நவீனக் கவிதை வடிவங்களை நுட்பத்துடன் கையாளக்கூடிய, தனித்திறன் கொண்ட தமிழ்ப்பாவலர். ஓசையின் உயிர்ப்பும் படிமச் செழுமையும் ஆழமான மெய்யியல் நோக்கும் இவரது கவிதையின் அடையாளங்கள். சிக்கலான யாப்பு வடிவங்களைச் சிறப்பாகக் கையாளும் திறமைக்காக அறிஞர்களால் பாராட்டப்படுபவர். மகாகவி பாரதி இவரது ஆதர்சம். எட்டாவது வயதில் சந்தக் கவிதை எழுத ஆரம்பித்தவர். விரிவான தகவலை இவ்வலைத்தளத்தின் 'அறிமுகம்' பகுதியில் காண்க.

கூண்டுக்கிளி

வெண்பா: கூண்டில் உழலும் கிள்ளை, வேண்டும் இடமெலாம் திரியும் காக்கை

காகாவென் றேகரையும் காக்கைக்குத் துன்பில்லைவாகாஞ்சொல் பேசும் மடக்கிளியோ – நாகாவாக்குற்றத்தால் கூண்டடையும்! கூர்மதியால் ஓர்ந்தாய்ந்தேஉற்றுத்தேர் இஃதே உலகு – மதுரன் தமிழவேள் கவிஞர் சூழ் புலனக் குழுமமொன்றில் நாசாவில் பணிபுரியும் தமிழ்வல்ல நல்லறிஞர் முனைவர் நா. கணேசனார் மேலேயுள்ள படம் தந்து வெண்பா எழுத வேண்டினார். அப்போது யாத்த வெண்பா இது. முனைவர் மயில்சாமி மோகனசுந்தரம் அவர்கள் எழுதிய வெண்பாவுக்கும் (கீழே உள்ளது) என்னதுக்குமான மறுமொழியாக “இந்தியாவில் நிகழ்ந்த மொழியியற் புரட்சியின் சூக்குமம் சொல்லியுள்ளீர்கள். இரு செம்மொழி …

வெண்பா: கூண்டில் உழலும் கிள்ளை, வேண்டும் இடமெலாம் திரியும் காக்கை Read More »

அழியும் நிலையிலுள்ள பனுவல்கள் – இலண்டன் பிரித்தானிய நூலகத்தில் யாப்பருங்கலக்காரிகை

அமிதசாகரர் 11ம் நூற்றாண்டில் எழுதியதாகக் கருதப்பெறும் யாப்பிலக்கண நூல் ‘யாப்பருங்கலக்காரிகை’. தமிழ் யாப்பின் தலையாய நூல்களுள் ஒன்று இது. இந்த நூல் அடங்கிய சிதைவுண்ட ஏட்டுச்சுவடியின் (1800-1850 காலப்பகுதிக்குரியது) எண்ணிமப்படியை பிரித்தானிய நூலக வலைத்தளத்தில் இன்று கண்டேன். யாழ்ப்பாணம், கோண்டாவிலில் இருந்து மீட்கப்பட்ட ஏட்டுச்சுவடியை நூலக நிறுவனம் (noolaham.org) எண்ணிமப்படுத்தியிருக்கிறது (Digitization). அழியும் ஆபத்துள்ள பனுவல்களைப் பாதுகாப்பதற்கான பிரித்தானிய நூலகத்தின் பெருந்திட்டத்தின் கீழ் 1500க்கும் மேற்பட்ட தமிழ் ஏட்டுச்சுவடிகள் படியெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இசுபானியம் (Spanish), ஆங்கிலம் (English), …

அழியும் நிலையிலுள்ள பனுவல்கள் – இலண்டன் பிரித்தானிய நூலகத்தில் யாப்பருங்கலக்காரிகை Read More »

ஆசிரியப்பாவில் வெண்டளை மிக்கு வரலாமா: யாப்பாய்வு நூல்கள் சொல்லும் செய்திகள்

(உரையாடற் பின்னணி: ஆங்கிலப் பெருங்கவிஞன் ஷெல்லியின் To a Skylark என்ற கவிதையை அண்மையில் இமயவரம்பன் (இரா. ஆனந்த்) அழகுறத் தமிழ்ப்படுத்தியிருந்தார். ஆற்றொழுக்குப் பிசகாத அகவற்பாவாக (அகவற்பா = ஆசிரியப்பா) அத்தமிழாக்கம் அமைந்திருந்தது.  இப்பாடலில் வெண்டளை மிகையாக வருவதன் பொருத்தப்பாடு குறித்து முனைவர் மயில்சாமி மோகனசுந்தரம் அவர்கள் புலனக் குழுமம் ஒன்றில் உரையாடலைத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து மரபின் மைந்தன் திரு முத்தையா, முனைவர் நா கணேசன் ஆகியோரும் வெவ்வேறு கோணங்களை முன்வைத்தனர். எனது தரப்பாக முன்வைத்த …

ஆசிரியப்பாவில் வெண்டளை மிக்கு வரலாமா: யாப்பாய்வு நூல்கள் சொல்லும் செய்திகள் Read More »

ஒரு வானம்பாடிக்கு – To a Skylark – தமிழ் மொழிபெயர்ப்பு (இரா. ஆனந்த்)

பாரதியின் மனம் கவர்ந்த மகாகவிஞன் ஷெல்லி. ஆங்கிலத்தில் ஷெல்லி இயற்றிய ‘To a Skylark’ என்னும் கவிதையைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருமாறு டாக்டர். கணேசன் அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார். அவரது அன்பு வேண்டுகோளுக்கு இணங்க நான் எழுத முயன்ற மொழிபெயர்ப்பை இங்கே அளிக்க விரும்புகிறேன். இமயவரம்பன் (இரா. ஆனந்த்) English Original : https://www.poetryfoundation.org/poems/45146/to-a-skylark ஒரு வானம்பாடிக்கு – தமிழ் மொழிபெயர்ப்பு (நிலைமண்டில ஆசிரியப்பா) 1. கட்டிலாக் களிப்பின் உயிர்ப்பே வாழி! பறவையென் றுன்னைப் பகர்தற் கரியாய்! …

ஒரு வானம்பாடிக்கு – To a Skylark – தமிழ் மொழிபெயர்ப்பு (இரா. ஆனந்த்) Read More »

தேங்காயும் சிவனும் ஒன்று

மூன்று கண், உச்சிக் குடுமி, நீர் ஓடு இறையியல்பு இவை இருப்பதால் தேங்காயும் சிவனும் ஒன்று என்று காளமேகப் புலவர் பாணியில் நேற்று ஒரு வெண்பா எழுதியிருந்தேன். தொகாப்பியர் பேரவைப் புலவர் காளியப்பன் ஐயா அவர்களின் வெண்பாவைப் படித்த பிறகு ஏற்பட்ட உந்துணர்வில் – தொடையின்பம் தோன்றப் பாடலாமே என்று எண்ணி – எழுதியது (இறையியல்பு தவிர்ந்த ஏனைய ஒப்புமைகள் அவர் பாட்டிலும் வருகின்றன). இறையியல்பு – தேங்காயைக் கருதினால் சிதறும் இயல்பு. இறைதல் – சிதறுதல். …

தேங்காயும் சிவனும் ஒன்று Read More »

The buddha in the tamil land

(English translation of my latest post on FB – Madhuran Thamilavel) The newly released logo of Sri Lankan archaeology department featuring Buddhist stupa has caused agitation among Tamils on social media platforms. The essential understanding that Tamils need to establish with the Sinhalese is that the presence of Stupa in the logo does not and …

The buddha in the tamil land Read More »

ஒரு சொல், ஒரு குறள்: 51-90

மூன்று நாள்களுக்கு முன் முகநூலில் விளையாட்டாக இந்தத் தொடர் உருப்பெறத் தொடங்கிய கதையையும் முதல் 50 குறள் வெண்பாக்களையும் இங்கே படிக்கலாம். செய்தியின் சுருக்கம் இதுதான்: தமிழ் ஒலிப்புள்ள சொல்லொன்று தந்தால் நான் உடனுக்குடன் குறள் வெண்பா யாத்துத் தருவேன். குறள்வெண்பா தமிழின் பழைய செய்யுள் வடிவங்களுள் ஒன்று. இரண்டு அடிகளில், ஏழு சீர்களில் வெண்டளை பிறழாமல் அமைவது. கீழே உள்ளவை 51 முதல் 90 வரையான குறட்பாக்கள். நூறு பாக்களோடு இந்தத் தொடரை நிறைவு செய்ய …

ஒரு சொல், ஒரு குறள்: 51-90 Read More »

சொல் தந்தால் குறள் தருவேன்: முதல் 50 பாக்கள்

முக நூலில் நேற்று விளையாட்டாக ஒரு குறள்வெண்பாத் தொடர் தொடங்கியிருந்தேன். தமிழ் ஒலிப்புள்ள ஒரு சொல் தந்தால் – அது ஒருவருடைய பெயராகக்கூட இருக்கலாம் – உடனே ஒரு குறள் வெண்பா எழுதித் தருவேன். இது தான் நான் வெளியிட்ட அறிவிப்பு. ஒரு நாள் இடைவெளியில் 50 குறட்பாக்கள் யாக்கப் பெற்றிருக்கின்றன! பலர் தம் மக்கள் பெயரைத் தந்திருந்தனர். குழந்தைகளை வாழ்த்தி ஆசியளிப்பதை விடப் பேரின்பம் வேறேது? எனவே இவற்றில் உள்ளவை பலவும் வாழ்த்துப் பாக்களே! பொருளில்லாமல் …

சொல் தந்தால் குறள் தருவேன்: முதல் 50 பாக்கள் Read More »

வலைக்கண்ணில் குதறலாகத் தெரியும் தமிழ் எழுத்துகளைச் சரி செய்வது எப்படி ?

மேற்கோள் காட்டுகையில் / சமூக வலைத்தளங்களில் பகிர்கையில், குளறுபடியாக, வலைக்கண் URL மாறிவிடுகிறது. உதாரணமாக, https://madhuramoli.com/விளாங்காய்ச்சீர்-விளங்/​என்னும் பதிவு https://madhuramoli.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D/ என மாறும். குதறிவிடும் எழுத்துகளின் பெயர் இது தான்: https://en.wikipedia.org/wiki/Numeric_character_reference இக் குதறலைத் தடுக்கும் வழி:(1) வலையுலாவியில், URL மீவரியில், http:// அல்லது https:// அடுத்து வரும் எழுத்துகளை, நோட்பேடில் ஒட்டவும்.(2) பின்னர், https:// அல்லது http:// சேர்த்து விடுக.(3) இப்பொழுது, நோட்பேடில், வலையுலாவியில் என்ன பார்க்கிறீர்களோ அதுவே தெரியும். அதனை வாட்ஸப், கூகுல்குரூப், … போன்றவற்றில் …

வலைக்கண்ணில் குதறலாகத் தெரியும் தமிழ் எழுத்துகளைச் சரி செய்வது எப்படி ? Read More »

கணந்தோறும் நிறம்மாறும் நினைவுப் பறவை

கார்ட்டீசிய மெய்யியலில் இருந்து பௌத்தப்பள்ளி நோக்கி – ராவணன் தர்ஷனின் ‘நினைவோ ஒரு பறவை’ கவிதைத்தொகுப்பை முன்வைத்துச் சில சிந்தனைகள் “தர்க்கத்தை மீறிய மீ உணர்வு சொல்லப்படும்போது தர்க்கத்தின் உடன் பிறப்பான ஒழுங்கு சீர்குலைந்து பிறழ்வு நேர்ந்துவிடக்கூடாது என்பது கருதி ஆதி காலத்தில் கவிதை தனக்கான வாகனமாகச் செய்யுளை ஏற்றுக்கொண்டது” நினைவுப் பறவை என்பது – நினைவை ஒரு பறவையாகச் சொல்வது – கச்சிதமான உருவகம். கடந்த காலம், எதிர்காலம் என்ற இரண்டு கோடுகளுக்கிடையில் தத்தித் தாவியபடி …

கணந்தோறும் நிறம்மாறும் நினைவுப் பறவை Read More »

வெண்பா, க.கலித்துறை: பள்ளிக் காலத்தில் எழுதிய பாக்கள்

எனது கவிதைகளைத் தொகுத்து நூலுருவிற் கொண்டுவரும் முயற்சியை முதன் முதலாக 2003ம் ஆண்டு தொடங்கினேன். அப்போது எனக்கு அகவை 20. திண்டுக்கல்லைச் சேர்ந்த பதிப்பகத்தார் ஒருவர் நூலை வெளிக்கொணர முன் வந்தார். எனது தந்தையாரும் உந்துதலாக இருந்தார். 16ம் அகவையில் இருந்து 20ம் அகவை வரை எழுதிய கவிதைகளைத் தொகுத்துத் தந்தேன். இப்போதுபோல அசுரத்தனமாக நூல்களை அச்சிட்டு வெளித்தள்ளும் வசதியும் வழக்கமும் அக்காலத்தில் இருக்கவில்லை. கவிதைகளைக் கையளித்து ஈராண்டின் பின்னர்த் தமிழகத்தில் இருந்து மெய்ப்புப் பார்ப்பதற்கான முதற்படி …

வெண்பா, க.கலித்துறை: பள்ளிக் காலத்தில் எழுதிய பாக்கள் Read More »

எது வள்ளலார் பூமி?

நல்லறிஞர், இடதுசாரிச் சிந்தனையாளர், தோழர் வே.மு.பொதியவெற்பன் அவர்களுடன் முக நூலில் நடந்த உரையாடல் கீழே உளது. பொதிகைச்சித்தருடனான இவ்வுரையாடலைக் கண்டு வேண்டாத முன்முடிவுகளுக்கு வர உந்தப் பெறுவோர் ” சிவைதாவும் உவேசாவும் ஆறுமுகத்து நாவல்லோனும் ‘வரலாறில்லாத் தமிழ’னெனும் வசைகிழித் திசைபடச் சங்க இலக்கிய இலக்கண உரைகள் மீட்டெடுத்திங்கே நாட்டி விட்டாரே” என்று நாவலர் திறத்தை நவின்றபடியே தனது கண்டனத்தைப் பதியும் அவர்தம் சான்றாண்மை உணர்க. வீண் உரை தவிர்த்திடுக! தோழர் வே.மு. பொதியவெற்பன்: இது இராமலிங்க பூமி! …

எது வள்ளலார் பூமி? Read More »

பாரதியின் ஆரியச்சாய்வும் பார்ப்பன மேட்டிமையும்: பழியுரை மறுத்தல்

சமூக வலைத்தளங்களில் நிகழ்ந்த உரையாடல்களில் கூறிவை – அகழ் ஆய்வின்றி விரைந்தெழுதித் தொகுத்தவை பழியுரை 1:  பாரதி ‘ஆரிய பூமி, ஆரிய ராணி’ என்றெல்லாம் பாடினான். எனவே அவன் தமிழருக்கு எதிரானவன். பழியுரை 2: கடலூரில் சிறைவைக்கப்பட்ட சமயம் ஆங்கிலேய ஆளுனருக்கு பாரதி எழுதிய கடிதத்தில் அவனது பார்ப்பன மேட்டிமை தெரிகிறது. மறுப்பு: குருஞான சம்பந்தர் ‘சொக்கநாத வெண்பா’ என்றொரு நூல் புனைந்துள்ளார். 94 நேரிசை வெண்பாக்கள் அதன்கண் இடம்பெற்றுள்ளன. வானுலகோர் போற்றும் தாமரைப் பாதங்களைக் கொண்டவனே …

பாரதியின் ஆரியச்சாய்வும் பார்ப்பன மேட்டிமையும்: பழியுரை மறுத்தல் Read More »

பாரதி மீது இரு வெண்பாக்கள்

பாட்டுத் திறத்தாலே பாழாம் அடிமைகைப்பூட்டுத் திறந்த புலவன்,ஒளி – காட்டிஎனையாண்ட நாதன் இனியார் அகத்தைத்தனையாள ஏற்கும் தமிழ் காணிநிலம் கேட்ட கவிஞனுக்குப் பூவனைத்தும்பேணி ஒளிசெய்யும் பேறளித்தாய் – வாணீ!நினைத்தலை சாய்த்துப் பணிகின்றேன் நின்தாள்நினைத்தலைச் செய்கஎன் நெஞ்சு (2004) பாரதி – எட்டயபுரத்துச் சுப்பிரமணிய பாரதி, ஏட்டியல் புரத்துக் கலைவாணி வாணீ – விளி என்பதால் நீண்டது.. வருக்க எதுகை வாராத ஓசைக்காகக் குறுக்கிப் படித்தாலும் குறையன்று. – மதுரன் தமிழவேள்

அசை யாப்பிலக்கணம்

இளையோருக்கு யாப்பிலக்கணம்: கற்பித்தல் அனுபவம்

அஞ்சலி (13), சித்தார்த் (9) இருவரும் போன ஆண்டு கோவையில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து சென்ற குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள். ஆங்கில வழியில் கல்வி கற்பவர்கள். ஆங்கிலத்தில் கல்வி கற்றாலும் குழந்தைகள் தாய்மொழியை மறந்துவிடக் கூடாது என்பது தமிழார்வம் மிக்க அவர்தம் தந்தையாரது பெருவிருப்பு. பேரா மயில்சாமி மோகனசுந்தரம் ஐயா அவர்கள் அறிமுகப்படுத்தியதன் பேரில் குழந்தைகள் இருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களாக இணையம் வழியாகத் தமிழ் சொல்லித் தருகிறேன். எழுத்திலக்கண அடிப்படைகளோடு சேர்த்து யாப்பிலக்கணமும் கற்பித்து வருகிறேன். …

இளையோருக்கு யாப்பிலக்கணம்: கற்பித்தல் அனுபவம் Read More »

நிரை அசை விகற்பங்கள்: விளாங்காய்ச்சீர் – விளங்கா(ய்)ச் சீர்

(இக்கட்டுரை எழுதத் தூண்டுகோலாக அமைந்த அறிஞர் முனைவர் நா கணேசன், மரபின் மைந்தன் திருவளர் முத்தையா ஆகிய பெரியோர்க்கு மிகு நன்றி. தொடர்புடைய செய்திகள் கட்டுரையின்கண் சொல்லப்பட்டுள்ளன) கற்றலுக்குக் கற்பித்தலே மிகச்சிறந்த வழி என்றுணர்ந்த காரணத்தால் கடந்த மூன்றாண்டுகளாக இணையம் வழியாக யாப்பிலக்கணம் கற்பித்து வருகிறேன். வழக்குரைஞர், மருத்துவர், பல்துறைப் பேராசிரியர், கல்லூரி மாணவர் என்று பலதரப்பட்டோரும் இந்த வகுப்புகளில் பங்கேற்றுப் பயின்று வருகிறார்கள். (கற்போர் கருத்து இங்கே உளது) உறுப்பியலில் குறில், நெடில், ஒற்று, அளபெடை, …

நிரை அசை விகற்பங்கள்: விளாங்காய்ச்சீர் – விளங்கா(ய்)ச் சீர் Read More »

நயன்தாரா நிலை: திருக்குறள் விளக்கம்

Gossip எனப்படும் வீண்பேச்சை அறவே தவிர்க்க வேண்டும் என்பதைப் பத்துக் குறள்களில் வலியுறுத்துகிறார் வள்ளுவர் (பயனில சொல்லாமை). இரண்டு குறட்பாக்கள்: நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப் பண்பிற்சொற் பல்லா ரகத்து பொருள்: பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும். (மு.வ) நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கு முரை ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும். …

நயன்தாரா நிலை: திருக்குறள் விளக்கம் Read More »

போரின் புதிய முகங்கள்: வே. தொல்காப்பியன்

நேற்று இத்தளத்தில் வெளியான ‘தனிமைக்கு எதிராக எழுதுதல்‘ மொழிபெயர்ப்புப் பற்றி வந்த மின்னஞ்சல் கீழே. வே. தொல்காப்பியன் அவர்கள் எழுதியது. கூடவே தனது தளத்தில் எழுதிய பதிவொன்றையும் பகிர்ந்திருந்தார். உலக அமைதி குறித்து அக்கறை கொண்டுள்ள எல்லோரும் சிந்தையில் பதிக்க வேண்டிய முக்கியமான கருத்துகள் சிலவற்றை அதில் முன்வைத்திருந்தார். அப்பதிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளைக் கீழே தந்திருக்கிறேன். முழுமையான பதிவைப் படிப்பதற்கான இணைப்பும் முடிவில் தரப்பட்டுள்ளது. அன்புள்ள ஐயா, வணக்கம். மொழிபெயர்ப்பு கடினமான பணி. முற்போக்கு, இடதுசாரி சிந்தனையாளர்களின் …

போரின் புதிய முகங்கள்: வே. தொல்காப்பியன் Read More »

தனிமைக்கு எதிராக எழுதுதல் – எடுவார்டோ கலியானோ நேர்காணல்

1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான The Progressive இதழிலும் அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு வெளியான Louder than Bombs: Interviews from the Progressive Magazine நூலிலும் இடம்பெற்ற நேர்காணலின் தமிழ் வடிவம் ஆங்கிலம் வழி தமிழில்: மதுரன் தமிழவேள் (2013 பெப்ரவரி காலச்சுவடு இதழில் மொழிபெயர்ப்பாளரின் இயற்பெயரோடு வெளியானது) யூகோஸ்லாவியா, ஈராக், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் போர்களைப் பற்றிக் கேள்விப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விடை கிட்டாத அதே கேள்வியை நான் எப்போதும் திரும்பத் …

தனிமைக்கு எதிராக எழுதுதல் – எடுவார்டோ கலியானோ நேர்காணல் Read More »

சிலம்பரசனின் புல்லட்-டுப் பாட்டும் குற்றியலுகரமும்

பொறுப்புத் துறப்பு: ஆங்கில வார்த்தைகளை அள்ளித் தூவித் திரைபாடல்கள் எழுதுவதை வரவேற்பவன் அல்லன் நான். என்றாலும் அப்படியான பாடல்களே அளவு கணக்கற்று வெளியாகின்றன – அவைதாம் இளையோரை ஈர்க்கின்றன என்ற வாதத்தோடு. சரி, அப்படி ஈர்க்கப்படுபவர்களிடத்தில் அஃதை வைத்தே தமிழ் பேசலாம் என்ற நினைப்பில் முகநூலில் எழுதிய பதிவு இது: சிலம்பரசன் ‘புல்லட்டு சாங் (bullet song)’ பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பாடியிருக்கிறார். அது பற்றி வேடிக்கையான ஓர் அறிவிப்புக் காணொளியையும் வெளியிட்டிருக்கிறார்கள் …

சிலம்பரசனின் புல்லட்-டுப் பாட்டும் குற்றியலுகரமும் Read More »

கிளம்பிட்டாய்ங்கய்யா.. கிளம்பிட்டாய்ங்க: பழைய பிணக்கு, புதிய கணக்கு

கொஞ்சம் பழைய பிணக்குத்தான். சொற்கடலில் சுழியோடிக் கொண்டிருந்த வேளை தோன்றி மின்னித் தெறித்திருப்பது புதிய பொறியென்பதால் பகிர்கிறேன். இதன் மூலவராக இருந்த கவிஞர் மகுடேசுவரன் பெயரெச்சம் தொடர்பாக இரண்டொரு நாள்களுக்கு முன்னர் நடந்துகொண்டிருந்த முகநூல் உரையாடலில் முன்வைத்த கேள்விகளைப் பொறுக்கமாட்டாமல் என்னை நட்பு நீக்கம் செய்துவிட்டுச் சென்று விட்டார். இங்கு முன்மொழியும் புதிய தீர்வை அவர் படிக்க மாட்டார் என்பது சோகம். பழைய பிணக்கு இதுதான்: கிளப்ஹவுஸ் (Clubhouse) செயலியின் வரவு பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் வழமை …

கிளம்பிட்டாய்ங்கய்யா.. கிளம்பிட்டாய்ங்க: பழைய பிணக்கு, புதிய கணக்கு Read More »

மொழிக்கல்வி: இன்றைய தேவை

வைதீக மேலாதிக்க மரபு போலப் புலவர்/பண்டிதர் மேலாதிக்க மரபு என்ற ஒன்றும் நம்மிடையே உண்டு. ஞானத்துக்கான முற்றதிகாரம் கொண்டவன் நானே – கடவுளை அடைவதற்கும் கருவறைக்குள் நுழைவதற்குமான உரித்து எனக்கு மட்டுமே உளது என்று எப்படி வைதீக மரபின் பூசாரி வாயிலை அடைத்துக்கொண்டு நிற்பாரோ, அப்படியே ‘மொழி நுணுக்கங்கள் பற்றிச் சிந்திக்கவும் பேசவும் உனக்கென்ன அருகதை இருக்கிறது?’ என்று கேட்டபடி தமிழ் மரபின் இலக்கணப் புலவரும் உங்களிடத்துத் தாழ்வுணர்ச்சியை உண்டு பண்ணவும் ஏளனம் செய்யவும் முனைந்து கொண்டே …

மொழிக்கல்வி: இன்றைய தேவை Read More »

குற்றியல் உகரம் என்றால் என்ன?

குற்றியலுகரப் புணர்ச்சி பற்றிய ஓர் உரையாடல் நேற்று முகநூலில் இடம்பெற்றது. குற்றியலுகரம் என்றால் என்ன? குறில், நெடில் நமக்குத் தெரியும். அ – குறில் ஆ – நெடில் இ – குறில் ஈ – நெடில் உ – குறில் ஊ – நெடில் குறில் என்ற அளவில் உகரம் (‘உ’ என்ற எழுத்தொலி) ஏனைய குற்றெழுத்துகள் போலவே ஒரு மாத்திரை அளவு காலம் ஒலிக்கும். செக்கன், நிமிடம் முதலானவை போல மாத்திரை என்பதும் ஒரு …

குற்றியல் உகரம் என்றால் என்ன? Read More »

அருஞ்சொல்: திணைக்களம்

இலாகா/துறை/பிரிவு ஆகிய சொற்களுக்கு இணையாக இலங்கையில் ‘திணைக்களம்’ என்ற தொடர் பயன்பாட்டில் உள்ளது. இவ் அருஞ்சொல் எவ்விதம் தோன்றியது என்று பன்னாள் சிந்தித்ததுண்டு. இன்று திருக்குறள் ‘இறைமாட்சி’ அதிகாரத்தின் (பொருட்பால் – அரசியல்) குறட்பாக்களுக்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் எழுதிய உரையைப் படித்துக்கொண்டிருக்கும்போது ‘அரசியல் திணைக்களங்கள்’ என்று அதே பொருளில் அவர் எடுத்தாண்டிருப்பதைக் கண்டேன்! இராசேந்திர சோழனின் செப்பேடுகளிலும் உள்ளமை தேடிப்பார்த்தபோது தெரிந்தது: ‘புரவுவரித் திணைக்களத்து வரிப்பொத்தக நாயகன்’

ஈழத்துயர்: ஆறாத அனல் சுட்ட காயம்

ஆறாத அனல்சுட்ட காயம் – நம்அன்னை நிலத்தினில் எந்நாளில் தேயும்?ஆறாத அனல்சுட்ட காயம் – நம்அன்னை நிலத்தினில் எந்நாளில் தேயும்? கந்தகம் படிந்த வெந்தணல் நதியில்கரைந்ததோ எங்களின் கனவுசந்ததம் நெஞ்சில் சஞ்சலம் விஞ்சித்தளருமோ விடியலின் நினைவு? (ஆறாத…) மானுட நீதி தாழுதல் கண்டுவையகம் விழித்துயிர் பெறுமோ?ஊனிடர் பட்டும் உளம்குலை வுற்றும்உழல்பவர் விழித் துயர் அறுமோ? (ஆறாத) பேய்க்களம் ஆடித் தீர்த்தவர் செய்த‌பிழைகளைப் பொறுக்குமோ உலகம்?ஆய்க்கினை நீள இருள்வெளி சூழ‌அரண்டிடும் நிலையென்று விலகும்? (ஆறாத) எத்தனை எத்தனை நிணப்புதை …

ஈழத்துயர்: ஆறாத அனல் சுட்ட காயம் Read More »

சின்னக் கலைவாணர் x சின்ன கலைவாணர்: எது சரி?

சின்னத்தாய் வல்லொற்றொலி விடுத்துச் சின்னதாய் ஆவாளா? கவிஞர் மகுடேசுவரனின் கட்டுரையை முன்வைத்துச் சில இலக்கணச் சிந்தனைகள் அண்மையில் தினமலர் இதழில் கவிஞர் மகுடேசுவரன் ஓர் இலக்கண விளக்கக் கட்டுரை எழுதியிருந்தார். ‘சின்னக் கலைவாணர்’ போன்ற சொற்றொடர்களில் வல்லொற்று மிகல் ஆகாது; சின்ன கலைவாணர் என்றே எழுத வேண்டும் என்பது அச் சிறுகட்டுரையின் சாரம். அதனை முகநூலிலும் பகிர்ந்திருந்தார். மறைந்த நடிகர் விவேக் பெயரில் அவர் வாழ்ந்த தெருவுக்குத் தமிழக அரசு ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என்று …

சின்னக் கலைவாணர் x சின்ன கலைவாணர்: எது சரி? Read More »

wellness, reed, relaxation-3318709.jpg

கர்மா குறித்து: அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவது..

1 நிமிட வாசிப்பு இலங்கையின் தற்போதைய சூழலை முன்வைத்து: கர்மா – புத்தரின் வார்த்தையில் சொல்வதென்றால் கம்மா – என்பது நம்மில் அநேகர் நினைப்பதுபோல் ‘கெட்டது செய்தால் கெட்டது நடக்கும்’ என்பதான நேர்வழிச் சூத்திரம் அன்று. ஒவ்வொருவர் செய்யும் நற்செயலையும் தீச்செயலையும் வானத்தில் இருக்கும் ஒரு சித்திரகுப்தனார் கணக்கெடுத்து வைத்துக்கொண்டு தக்க நேரத்தில் ஆகூழையும் போகூழையும் விதிப்பதும் இல்லை. உண்மையில் நமது ஆழ்மனமே அந்தச் சித்திரகுப்தனார். தனக்குச் சாதகமான சூழலில் கொடுங்குற்றமொன்றை முழுச்சுதந்திரத்தோடு (with total immunity) …

கர்மா குறித்து: அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவது.. Read More »

தமிழணங்கு 

கரிய நிறத்தவள் காண் எங்கள் அன்னை – அடர் காட்டில் உலவிக் களி நடம் புரிவாள் அரிய திறத்தவள் காண் எங்கள் அன்னை – உடல் ஆவிக்(கு) அமுதென அன்பைச் சொரிவாள் ஐந்து திணைகளிற் செழித்தவள் அன்னை – தன் ஆதி மனிதர் கனவுருக் கொண்டாள் நைந்து மடிந்திடும் மொழிகளின் நடுவில் – என்றும் நலிவி லாத பெருநிலை கண்டாள் உயிரொலி ஐந்தும் மந்திரம் ஆகும் – அவை உடலொடு சேரச் சன்னதம் தோன்றும் இயலிசை நாடகம் …

தமிழணங்கு  Read More »

“கள்” பெற்ற பெருவாழ்வு

– டாக்டர் மு. வரதராசன், ‘மொழியியற் கட்டுரைகள்’ நூலில் இருந்து        எதற்கோ தொடங்கிய முயற்சி வேறு எதற்கோ பயன்படுவது உலகியற்கை. வெண்கதிரைக் குறிக்க ஏற்பட்ட ‘திங்கள்’ என்னுஞ் சொல் இன்று அப்பொருளை அவ்வளவாக உணர்த்தாமற் கிழமையையும் மாதத்தையும் உணர்த்தப் பயன்படவில்லையா? அதுபோல் அஃறிணையாகிய குழந்தைகளை உணர்த்த ஏற்பட்ட ‘மக்கள்’ என்னும் சொல் காலப்போக்கில் உயர்திணையாகிய மனிதரை உணர்த்துவதாயிற்று.   ‘கள்’ மிகப் பழையது; நெடுங்காலத்திற்கு முன்பே இருந்தது. ‘மக்கள்’ தோன்றிய பழங்காலத்திலேயே ‘கள்’ இருந்தது. ஆனால் பழங்காலத்தில் அதற்கு …

“கள்” பெற்ற பெருவாழ்வு Read More »

வள்ளுவர், வைரமுத்து, வாலி, ரஹ்மான், ராஜா

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை தமிழுக்கு என்ன தந்தது? எனக்கு இசை நுணுக்கங்கள் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் இசை என்ன செய்யக் கூடுமென்று உணர்ந்திருக்கிறேன். ‘அலை பாயுதே’ படத்தில் வரும் ‘ஸ்நேகிதனே’ பாடலை எத்தனையோ தடவை கேட்டிருக்கிறேன். அதன் ஆரம்பத்தில் வரும் ‘கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில் கருவம் அழிந்ததடி’ என்ற வரி தமிழின் மிகப்பழம்பெரும் பா வடிவமான குறள் வெண்பாவின் இலக்கண அமைப்புக்குள் அடங்கக் கூடியதாய் இருப்பதை நேற்றுத்தான் எதேச்சையாகக் கவனித்தேன். …

வள்ளுவர், வைரமுத்து, வாலி, ரஹ்மான், ராஜா Read More »

பாரதியின் ஊழிக்கூத்து

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும் வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின் அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக்-களித் தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ! அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை ஆசன விளிம்பில் உங்களைக் கொண்டு வந்து வைக்கின்ற ஓர் investigative crime thriller; அடுக்குகள் நிறைந்த ஆழமான கவிதை; ஞானத்தை நோக்கிய மானச யோகம் – இவை மூன்றிலும் பொதுவாகக் கிடைக்கக் கூடிய அனுபவம் என்ன? இதோ – அறுதியான முடிவை, எல்லாவற்றுக்கும் …

பாரதியின் ஊழிக்கூத்து Read More »

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானமும் சிலப்பதிகாரமும்

மணிரத்னம் ஒரு epic filmmaker. எந்த அர்த்தத்தில் என்றால் அவர் சொல்ல விழைகிற கதைகள் காவியக் கருப்பொருள் கொண்டவை. தளபதி, ராவணா நேரடியாக இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்டு மறு ஆக்கம் செய்யப்பட்ட கதைகள். அக்னி நட்சத்திரத்தின் கார்த்திக், மௌன ராகத்தின் ரேவதி ஆகியோரின் மனக்கொந்தளிப்புகளும் கூட எனக்கு முறையே கர்ணன்/விதுரனையும் அம்பையையும் நினைவு படுத்துபவை. காவியச்சுவை கொண்ட கதைகளை நாடுகின்ற மனப்பாங்குதான் மணிரத்னத்துக்கும் ஜெயமோகனுக்கும் ஒத்திசைவைத் தந்திருக்கக் கூடும் என்றும் நான் எண்ணிக்கொள்வதுண்டு. செக்கச் சிவந்த வானத்தைத் …

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானமும் சிலப்பதிகாரமும் Read More »

போட்டி மனப்பான்மை அவசியமா?

1 நிமிட வாசிப்பு – போட்டி போடுவது என்பது முதிராத நிலையில் இருந்த முதலாளித்துவம் தன்னை முன் தள்ளுவதற்காக மனிதர்களிடையே வளர்த்து விட்ட மனப்பண்பு. ஓயாத மனித உழைப்பு அசுரத்தனமாகப் பிழியப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மாயை. நுண்மனமும் கூர் அறிவும் கொண்டவர்களுக்கு இன்றைய நவீன உலகில் போட்டி மனப்பான்மை உபயோகம் தராத ஒன்று. இன்று அவசியமானது கூட்டு நன்மைக்காக ஒவ்வொருவரும் தத்தமது தனி ஆற்றலை – தனித்துவமான ஆற்றலை – ஒருங்கிணைத்துச் செயல்படுவது. விளைவாகக் கிடைக்கும் …

போட்டி மனப்பான்மை அவசியமா? Read More »

மொழி பற்றிய சில சிந்தனைகள்

ஜூன் 13, 2021 முகநூலில் எழுதியது: தமிழனாக இருப்பதொன்றே பெருமை என்று நான் நினைப்பதில்லை. தமிழ் பற்றிய எனது பெருமிதத்துக்கு அந்த மொழிவழி சிந்திக்கும்தோறும் அடைகிற அக அனுபவத்தின் செழுமை காரணமாகிறது. அதனது விரிவும் ஆழமும் ஆழிபோல் மிகுந்திருக்க, என்னால் அறிந்து கொள்ள முடிவது கடுகளவு என்பதை உணரும்போது உருவாகும் வியப்பால் பெருகுவது அப் பெருமிதமும் உடன்வரும் உவகையும். அதன் ஆழத்தையும் விரிவையும் உணரும் பொருட்டு ஒரு துரும்பைத்தானும் கிள்ளிப்போடாமல் தமிழன் தமிழன் என்று மார்தட்டுவதால் நன்மை …

மொழி பற்றிய சில சிந்தனைகள் Read More »

வெற்றியின் அபாயம்: தாவோ ஞானத்தை முன்வைத்து த்ரிஷ்யம் 2 பற்றிய ஒரு பார்வை

நிறையவே பாடுபட்டு ஒரு மலை உச்சியை அடைந்து விடுகிறீர்கள். அடுத்து என்ன? உச்சியை அடைந்தவருக்கு இனிமேல் எட்டுவதற்கு என்று ஓர் உயரம் இருக்காது. கீழே இருப்பது அதல பாதாளம். ஓர் ஆட்டத்தில்  வெற்றி அடைந்த பிறகு அடுத்து என்ன செய்வது என்பது சிக்கலான கேள்வி. வெற்றி என்ற மலையுச்சியை அடைந்து விட்டவர் எதிர் நோக்கும் அபாயம் பற்றித் தாவோயிசம் பேசுகிறது. வெற்றியின் போதை நமது கூர்மதியை மழுங்கச் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் …

வெற்றியின் அபாயம்: தாவோ ஞானத்தை முன்வைத்து த்ரிஷ்யம் 2 பற்றிய ஒரு பார்வை Read More »

பாரதியின் பேராசை: அசைவறு மதியும் ஆசைப்பெருக்கும்

அசைவுறு பேரண்டத்தை அசைவறு மதி கொண்டு நோக்க இயல்வதே கடவுள் நிலை. “Everything is in constant flux” – அனைத்தும் மாறாத ஓட்டத்தில் உள்ளன. ‘ஒரே ஆற்றில் நீங்கள் இருமுறை இறங்க முடியாது’ என்பது கிரேக்க மெய்யியல் ஞானி ஹெரக்லைடஸ் சொன்னதாகக் கூறப்படும் புகழ்பெற்ற வாக்கியம். ஏனென்றால், அந்தக் கணம் கடந்து விடும். அடுத்த கணம் அது புதியவோர் ஆறு. மாற்றம் அப்பேர்ப்பட்ட வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பது. சுப்பிரமணிய பாரதியை நாம் மகாகவியாக – பெருங்கவிஞனாகக் – கொண்டாடுவதற்கு அவனிடம் இருந்த பேராசையும் ஒரு …

பாரதியின் பேராசை: அசைவறு மதியும் ஆசைப்பெருக்கும் Read More »

கோபம் குடிகொண்டிருப்பது எங்கே?

எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஆளரவமற்ற ஓர் இடத்தில் இருந்து தியானம் செய்ய வேண்டும் என்று ஒரு பிட்சு விரும்பினார். மடாலயத்திலிருந்து புறப்பட்ட அவர் தூரத்தில் இருந்த குளத்தடிக்குச் சென்று கரையிலிருந்த படகில் ஏறினார். தானே துடுப்பு வலித்தவாறு குளத்தின் மையப்பகுதிக்குச் சென்றார். தனிமையில் கண்களை மூடி தியானம் செய்யத் தொடங்கினார். சுற்றி வர எவருமில்லை. அடுத்த சில மணி நேரம் நிசப்தம் மட்டுமே சூழலை நிறைத்தது. ஆழ்ந்த தியானம். மெய் மறந்து தியானத்தில் ஆழ்ந்திருந்த நேரம் திடீரென்று …

கோபம் குடிகொண்டிருப்பது எங்கே? Read More »

கொரோனா கால உள்ளிருப்பு – சில மனப்பதிவுகள்

ஓசோன் படல ஓட்டை, பருவ நிலை மாற்றம், வளி மாசு இன்னோரன்ன பலவற்றையும் ஆய்ந்து பேச எத்தனையோ அனைத்துலக மா நாடுகள் கூட்டப்பட்டபோதும் அவை எதுவும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாதத் தெரியவில்லை.
தான், தனது என்ற மாயத் தன்னுணர்வை (ego) மீறி இயற்கையோடும் பிரபஞ்சத்தோடும் இயைந்த கூட்டு மனமாகத் தன்னை ஆக்கிக்கொள்ள மனிதனால் இதுவரை இயலவில்லை.

×